அமேசான் கிண்டிலில் நான் வெளியிட்டுள்ள புத்தகங்கள்:
சமையல் புத்தகம்:
சமையல் புத்தகம்:
உங்களுக்கான இலவச பிரதியை பெற என் வலைதளத்தை பின்பற்றவும்.
புத்தகத்திலிருந்து சில குறிப்புகள் உங்களுக்காக:
சுலபமான
பிரியாணி வகைகள்
சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
சிக்கன் - 1 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 100 கிராம்
நெய் (அ) சமையல் எண்ணெய் - 250 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 3 துண்டு
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 6
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
எலுமிச்சை - 1
மல்லி புதினா - ஒரு கையளவு
தயிர் - 400 மில்லி
தேங்காய் - 1/2 மூடி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1) குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், போடவும்.
2) பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3) பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
4) பிறகு தக்காளி, தயிர், பச்சை மிளகாய், புதினா மல்லித்தழை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
5) அரிசியை கழுவி 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
6) தேங்காயை அரைத்து அதிலிருந்து 3 டம்ளர் பால் எடுத்து குருமாவில் ஊற்றி, எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
7) பிறகு அரிசியிலிருந்து நீரை வடித்து விட்டு குருமாவில் கொட்டி கிளறி குக்கரை மூடி விடவும்.
8) குக்கரில் வெயிட் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
9) பிரஷர் விட்டதும் பிரியாணியைக் கிளறி வேறு பாத்திரத்திற்கு மாற்றி பின்பு பரிமாறவும்.
___________________________________
விருந்து ஸ்பெஷல் மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
மட்டன் - 1 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 150 கிராம்
நெய் - 250 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 3 துண்டு
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 10
எலுமிச்சை - 1
மல்லி புதினா - ஒரு கையளவு
தயிர் - 400 மில்லி
கேசரி பவுடர் - சிறிதளவு
முந்திரி - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1) குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும்.
2) பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
3) பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
4) கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை போட்டு சிறிது நேரம் கிளறவும்.
5) பிறகு தயிர், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கிளறி விட்டு வெயிட் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
6) பாஸ்மதி அரிசியை கழுவி சுத்தம் செய்து 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்
7) பிறகு 1:1 விகிதத்தில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேறு ஒரு பாத்திரத்தில் வேக வைத்து கொள்ளவும்
8) குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சை சாறு ஊற்றி,புதினா, மல்லித்தழை தூவி கொதிக்க விடவும்.
9) கொதிக்கும் குருமாவில் வேக வைத்து இருக்கும் சாதத்தைப் போட்டுக் கிளறி சமப்படுத்தவும்.
10) பிறகு கேசரி பவுடரை சிறிது பாலில் கலந்து பிரியாணி மீது ஒரு பக்கமாக ஊற்றி, குக்கரை மூடி வெயிட் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
11) முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து பிரியாணி மீது தூவி விடவும்.
____________________________________
மீன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
வஞ்சிர மீன் - 1
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 100 கிராம்
பட்டை கிராம்பு ஏலக்காய் - தலா 3 துண்டு
பச்சை மிளகாய் - 10
எலுமிச்சை - 1
நெய் (அ) எண்ணெய் - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 4 ஸ்பூன்
தயிர் - 250 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1) மீனை துண்டுகளாக வெட்டிக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
2) அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு புரட்டி எண்ணெய் விட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
3) குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு பின்னர் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
4) பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
5) பிறகு தக்காளி, தயிர், பச்சை மிளகாய், புதினா மல்லித்தழை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
6) அரிசியை கழுவி 30 நிமிடம் நீரில் ஊற வைக்கவும்.
7) தேங்காயை அரைத்து 3 டம்ளர் பால் எடுத்து குருமாவில் ஊற்றவும்.
8) அரிசியிலிருந்து நீரை வடித்து விட்டு கொதிக்கும் குருமாவில் கொட்டி எலுமிச்சை சாறு, வறுத்த மீன் ஆகியவற்றை போட்டு கிளறி குக்கரை மூடி விடவும்.
8) குக்கரில் வெயிட் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
9) பிரஸர் விட்டதும் பிரியாணியை கிளறி விட்டு பிறகு பரிமாறவும்.
_______________________________________
முட்டை பிரியாணி
தேவையான பொருட்கள்:
முட்டை - 6
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 5
கேரட் - 100 கிராம்
பச்சை பட்டாணி - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்
எலுமிச்சை - 1
நெய் (அ) சமையல் எண்ணெய் - 200 மில்லி
புதினா மல்லித்தழை - ஒரு கையளவு
பட்டை,கிராம்பு,ஏலக்காய் - தலா 3 துண்டு
தேங்காய் - 1
தயிர் - 250 மில்லி
முந்திரி - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
செய்முறை:
1) அரிசியை கழுவி 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2) முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கிவிட்டு அதில் 1 ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு புரட்டி சிறிது நேரம் வைக்கவும்.
3) ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
4) அதே கடாயில் புரட்டி வைத்துள்ள முட்டைகளை சிவக்க வறுத்து கொள்ளவும்.
5) குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும்.
6) பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
7) பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
8) பிறகு பட்டாணி, கேரட் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
9) பிறகு பச்சை மிளகாய், தக்காளி, புதினா மல்லித்தழை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தயிர், உப்பு போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
10) தேங்காயை அரைத்து அதிலிருந்து 4 டம்ளர் பால் எடுத்து குருமாவில் ஊற்றி, எலுமிச்சை சாறு ஊற்றி, அரிசியிலிருந்து நீரை வடித்து விட்டு கொட்டி நன்கு கிளறவும்.
11) அத்துடன் வறுத்து வைத்துள்ள முட்டை, முந்திரி ஆகியவற்றை போட்டுக் கிளறி குக்கரை மூடி விடவும்.
12) குக்கரில் வெயிட் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.பிரியாணி பரிமாற தயார்…
________________________________
CONNECT WITH US :
Facebook page:
Twitter:
Youtube
Telegram channel link:
website
Wonderful book...must read
ReplyDeletePlease create more useful books like this..
Thanks for your valuable feedback. Will work on it
ReplyDelete